கடந்த மூன்று மாதங்களாக வெப்ஈழத்திலோ அல்லது வேறு தளங்களிலோ பத்திரிகைகளிலோ எதையும் நான் எழுதுவில்லை. என்னுடைய தளத்தையும் அப்படியே கிடப்பில் போட்டு விட்டு என் பாட்டுக்கு இருந்து விட்டேன்.

வெப்ஈழம் தளத்தை நான் ஆரம்பித்த பொழுது நிறையக் கனவுகளும் நோக்கங்களும் இருந்தன. இன்றைய யதார்த்தம் அந்தக் கனவுகளையும் நோக்கங்களையும் கடுமையாக அச்சுறுத்துகின்றன.

அரசியல் குறித்து எழுதுவதை நிறுத்தி விட்டு வேறு விடயங்களை எழுதுவோமா என்றும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். வெளிநாட்டவர்கள் மத்தியில் பரப்புரை செய்வதற்கு பயன்படும் என்பதனாலும், அரசியல் குறித்த எழுத்துகளுக்கு ஒரு அங்கீகாரத்தை தரும் என்பதனாலும் இடையில் நிறுத்தியிருந்த அரசியற் படிப்பை தொடர்ந்து மேற்கொண்டு அதில் இளங்கலை பட்டம் வரை முடித்து விட்டு முதுகலைப் பட்டத்திற்கான படிப்பையும் செய்து கொண்டிருக்கின்ற நேரத்தில்தான் இந்தக் கேள்வியும் எனக்குள் எழுகின்றது.

அரசியல் பற்றி மட்டும் என்று இல்லை, பகுத்தறிவு குறித்து எழுதுவதற்கான ஊக்கமும் இன்றைய நிலையில் என்னிடம் இல்லை. தமிழீழ விடுதலையே தமிழினத்திற்கு சமூக விடுதலையையும் சுயமரியாதையையும் பெற்றுக் கொடுக்கும் என்பதனால் பகுத்தறிவு பற்றி நம்பிக்கையோடு எழுதிக் கொண்டிருந்த என்னிடம் இன்றைக்கு பெரும் சோர்வே எஞ்சி நிற்கிறது.

………………………..

முள்ளிவாய்க்காலில் எமது தமிழீழப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்த நேரத்திலும் நான் தைரியமாகவே இருந்தேன். நடக்கப் போகின்ற விபரீதங்களுக்கு என்னுடைய மனதை முற்கூட்டியே தயார்படுத்தியிருந்தேன்

போர் தொடங்கிய பொழுது விடுதலைப் புலிகள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எல்லோரைப் போன்றும் எனக்கும் இருந்தது. கிழக்கை சிங்களப் படைகள் கைப்பற்றும் என்பதை நான் எதிர்பார்த்திருந்தாலும் வன்னி முழுவதையும் சிங்களம் கைப்பற்றும் என்பதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

ஆயினும் சிங்களப் படைகள் பூநகரி வரை வந்த பிற்பாடு, அதுவரை நடந்த களப்போக்கையும் கவனித்து வன்னி முழுவதும் பறிபோகின்ற ஒரு நிலைக்கு என்னுடைய மனதை தயார்படுத்திக் கொண்டேன். அப்பொழுதும் விடுதலைப் போராட்டம் மரபுவழிப் போரில் இருந்து கரந்தடிப் போர் முறைக்குப் மாறப் போகிறது என்றே நம்பியிருந்தேன்.

விடுதலைப் புலிகளை „ஓயாத அலைகள் 5“இன் மூலம் சிறிலங்காப் படைகளை மீண்டும் விரட்டி அடிப்பார்கள் என்று அன்றைக்கு பலர் கொண்டிருந்த நம்பிக்கைக்கு மாறாக கரந்தடிப் போர் முறைக்கு தமிழீழப் போராட்டம் மாறப் போகிறது என்றும் அதற்கு எம்மை தயார்படுத்த வேண்டும் என்று எழுதத் தொடங்கியிருந்தேன்.

இதைப் பற்றி அப்பொழுது யாழ் களத்தில் நான் ஆரம்பித்திருந்த விவாதத்தை இதில் பார்க்கலாம்

ஒரு நேரத்தில் கரந்தடிப் போருக்குள் கூட தமிழீழப் போராட்டம் நுழையப் போவதில்லை என்பதும் மாறாக பெரும் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்கின்ற உண்மையும் புரிந்தது. இந்த நிலையில் வெளிநாட்டில் இயங்குகக் கூடிய தமிழீழத்தின் புறநிலை அரசை உருவாக்குகின்ற திட்டங்கள் பற்றி ஏப்ரல் மாத நடுப்பகுதியில் என்னுடைய வட்டத்திற்குள் விவாதிக்க ஆரம்பித்திருந்தேன்.

எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையில் நிகழ்காலத்தின் அவலங்கள் என்னைக் கலங்கச் செய்வது இல்லை.

மே 19இற்கு பின்பு போராட்டத்தை வழிநடத்த தேசியத் தலைவரும் இல்லை என்கின்ற கோரமான உண்மையும் முன்னே வந்து நின்றது. அந்த நிலையிலும் எனக்குள் நம்பிக்கை இருந்தது. தேசியத் தலைவர் தமிழினத்தை ஒன்றுபடுத்தி பலப்படுத்தி விடுதலைக்கான பாதையையும் காட்டி விட்டு சென்றிருக்கின்ற நிலையில் தமிழினம் அவர் இல்லாத நிலையிலும் அந்தப் பாதையில் தொடர்ந்து நடைபோடும் என்று நம்பியிருந்தேன்.

தேசியத் தலைவருக்கு வெளிப்படையாக அஞ்சலி செய்யமுடியாத நிலை இன்றுவரை நிலவுகின்ற நிலையில் „வளரி“ இணையத் தொலைக்காட்சி வெளியிட்டிருந்த „என் இனமே என் சனமே“ என்கின்ற பாடற் காட்சியை என்னுடைய தளத்திலும் இணைத்து என் மனதிற்குள் அஞ்சலியை செலுத்தி விட்டு அடுத்தக் கட்டப் போராட்டம் பற்றி என்னுடைய தொடர்பு வட்டத்திற்குள் தீவிரமான உரையாடலை நடத்திக் கொண்டிருந்தேன்.

அன்றைய நாட்களில் நண்பர்கள் பலர் கலக்கத்தோடு என்னோடு தொலைபேசுவார்கள். அவர்களுக்கு தைரியம் சொல்லி தொலைபேசியில் ஒரு „வீர“உரையே நிகழ்த்துவேன். என்னுடன் பேசிய பிறகு சற்று ஆறுதலாக இருப்பதாக சொன்னவர்கள் உண்மையாகவே பலர் இருக்கிறார்கள்.

இப்படி தொலைபேசியில் பலருக்கு தைரியம் சொன்ன நான் இன்றைக்கு தமிழினத்தின் எதிர்காலம் பற்றி பெரும் அச்சத்தில் இருக்கிறேன். பேசாமல் அதி உத்தமர் மகிந்தவிடம் சரணாகதி அடைந்து விடலாமா என்ற சிந்தனை வேறு இடையிடையே வந்து தொலைக்கிறது.

………………………..

முள்ளிவாய்க்காலிற்கு பிற்பாடு மூன்று யோசனைகள் பற்றி என்னுடைய நண்பர்களுடன் விவாதித்தேன். இந்த யோசனைகளில் இரண்டு யோசனைகள் புதியவைகள் அல்ல. சில பல ஆண்டுகளுக்கு முன்னரே சிலரால் முன்வைக்கப்பட்டவைதான்.

1. தமிழீழப் புறநிலை அரசை உருவாக்குதல்
இது பற்றிய ஒரு விவாதத்தை இங்கே காணலாம். (தமிழீழ அரசை நடத்தியவர்களால் வெளிநாட்டு அங்கீகாரத்தோடு ஒரு புறநிலை அரசை உருவாக்க முடியாத நிலை இருப்பதனால் புலம் பெயர் நாடுகளில் வாழ்பவர்களினால் “நாடு கடந்த அரசு” ஒன்றை உருவாக்கும் ஒரு சிறப்பான திட்டம் கேபி மற்றும் உருத்திரகுமாரன் தரப்பினரால் முன்வைக்கப்பட்டது)

2. தமிழீழக் குடியேற்ற அரசை உருவாக்குதல்
இது பற்றிய விவாதத்தை இங்கே காணலாம்

மூன்றாவது யோசனை பற்றி சொல்வதற்கு முன்னர் தமிழீழப் போராட்டம் பற்றிய என்னுடைய நிலைப்பாட்டை சொல்லிவிடுகிறேன். ஆயுதப் போராட்டம் இல்லாமல் தமிழீழம் கிடைக்காது. இதை நான் உறுதியாக அடித்துச் சொல்கிறேன். இன்றைய காலகட்டத்தில் ஆயுதப் போராட்டம் பற்றி பேசுவதே மகா பாவமான செயலாக பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழீழமோ அல்லது ஒரு சுயாட்சியோ அல்லது ஒரளவு ஆதிகாரங்கள் கொண்ட மாகாணசபையோ எது வேண்டும் என்றாலும் ஆயுதப் போராட்டத்தை நடத்தாது சிங்கள அரசிடம் இருந்து அவற்றை பெற்று விட முடியாது.

சிலர் ராஜதந்திரப் போராட்டம் நடத்தி தமிழீழம் பெறுவது பற்றிப் பேசுகிறார்கள். அப்படி ஒன்றும் நடக்கப் போவது இல்லை என்பது அவர்களுக்கும் தெரியும். ஏதோ பேசி மக்களை ஆறுதல் படுத்த வேண்டுமே என்பதற்காகப் பேசுகிறார்கள்.

தமிழீழத்தில் ஆயுதப் போராட்டம் மிகப் பலமாக நடந்த வேளையில் நாங்கள் இங்கே ராஜதந்திரப் போராட்டம் நடத்தவில்லை. அதனால் மிகப் பலமாக இருந்தும் கடைசியில் தோல்வியைத் தழுவினோம். இப்பொழுது ராஜதந்திரப் போராட்டம் நடத்துவது பற்றி நாம் பேசுகின்ற பொழுது தமிழீழத்தில் ஆயுதப் போராட்டம் இல்லை. இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற்றால்தான் ஏதோ ஒரு இலக்கை நாம் அடைய முடியும்.

ஆயுதப் போராட்டத்தை இன்றைய நிலையில் உடனடியாக ஆரம்பிக்க முடியாத நிலையில் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பது சில வேளைகளில் உண்மையாக இருக்கலாம். ஆயுதப் போராட்டம் தமிழர்களை களைப்படையச் செய்து விட்டது என்பதும் உண்மையாக இருக்கட்டும். ஆனால் தேசிய உணர்வை தமது மனதுக்குள் தேக்கி வைத்திருக்கின்ற தமிழினம் தொடர்ந்தும் நசுக்கப்பட்டால் மீண்டும் ஆயுதத்தை ஏந்தும் என்கின்ற அச்ச உணர்வாவது எதிரிகளிடம் இருக்கும்படி நாம் செய்ய வேண்டும்.

இதன் அடிப்படையில்தான் அந்த மூன்றாவது யோசனை பற்றி சிலரிடம் உரையாடினேன். உண்மையில் இந்த யோசனை செயற்படுத்தப்பட்டிருந்தால் உலகம் அதிர்ச்சியோடு தமிழர்களைப் பார்த்திருக்கும் என்கின்ற நம்பிக்கை எனக்குள் இருக்கின்றது.

மூன்றாவது யோசைன பற்றி சொல்வதற்கு முன்னர் ஒன்றைச் சொல்ல வேண்டும். இந்த மூன்று யோசனைகளில் ஏதாவது ஒன்றை செயற்படுத்த வேண்டும் என்றாலும் அதற்கு தமிழர்களின் ஒற்றுமை என்பது மிக அவசியம். போட்டி பொறாமைகள் இல்லாத திறந்த விவாதங்கள் அவசியம். ஒருவருக்கு ஒருவர் துரோகிப் பட்டம் வழங்குவதை நிறுத்தி அனைத்துத் தமிழர்களும் “விடுதலை” என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஒன்றுபடுதல் அவசியம்.

“நாடு கடந்த அரசு” பற்றிய அறிவிப்பு வெளியானதும் சிறிலங்கா அரசும் சில வெளிநாடுகளும் அதை ஓரளவு அச்சத்தோடு பார்த்தன. இதை குழப்புவதற்கான வேலைத் திட்டங்களை போட்டன. இன்றைக்கு எமது எதிரிகளுக்கு வேலை வைக்காமல் எமது தமிழர்களே நாடு கடந்த அரசை பலவீனப்படுத்தும் வேலையை மிகச் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பல வல்லரசுகளின் துணையோடு வந்த சிறிலங்காப் படைகளை வென்று, இந்தியப் படைகளை வென்று, வன்னியை மூன்று நாட்களில் கைப்பற்றி, ஆனையிறவை வீழ்த்தி, கடற்படை கண்டு, வான்படை உருவாக்கி உயர்ந்து நின்ற ஒரு இனம் இன்றைக்கு செய்கின்ற கோமாளித்தனங்கள் மிகவும் அதிர்ச்சியையும் அயர்ச்சியையும் கொடுக்கின்றன. தமிழீழப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் எல்லாவற்றையும் சாதித்தது பிரபாகரன் என்ற தனிமனிதன் மட்டும்தானா? தமிழினத்திற்கு இதில் பங்கேதும் இல்லையா? தமிழினம் என்பது ஒரு குரங்குக் கூட்டமா?

தமிழர்களை ஒரு யூத இனம் போன்று நினைத்துக் கொண்டு கனவு காணாதே என்று நண்பர்கள் எச்சரித்த போதும் தமிழினத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. மனிதன் இசைவாக்கம் உள்ள ஒரு பிராணி. மற்ற இனங்களை விட இசைவாக்கம் செய்து தம்மை தக்க வைத்துக் கொள்வதில் தமிழர்கள் சிறந்தவர்கள். ஈழத்தில் நடக்கின்ற இன்றைய சமரசங்கள் அனைத்தையும் இதன் அடிப்படையிலேயே பார்க்கின்றேன். இன்றைக்கு தம்மை தக்க வைத்தால்தான் நாளைய கிளர்ச்சியும் வரும்.

தமிழினத்தின் மீது வைத்திருக்கின்ற அதீத நம்பிக்கையில் நான் முன்வைத்த மூன்றாவது யோசனை பற்றி சொல்ல வேண்டும். இரண்டு நாட்களுக்குள் கட்டாயம் சொல்கிறேன்.

- வி.சபேசன் B.A.Pol.Sci.

Posted in தமிழீழம், புலம்பெயர் அரசியல் | Read More »

Comments

rana on 14 February, 2010 at 6:59 pm #

good . i was wating for ur article .


rana on 14 February, 2010 at 7:09 pm #

now tamils have to do one very inportant thing which we dont have now and in our history also.that is we should have to start a new NEWS MEDIA like BBC, CNN or ALJASEERA.all tamils have to support for that.in the history who had not media they still need liberation. tamils had not any good media in their history. bramins had RAMAYANAM and MAHABARATHAM.if we have such media we may overcome from our present situation.PLEASE MR SABASAN,U HAVE TO WRITE A GOOD ARTICLE ABOUT THIS


Venu on 14 February, 2010 at 9:55 pm #

புலிகள் நடத்திய போராட்டம் தமிழர் தாயகம் என்று அவர்கள் உரிமை கோரிய இடங்களிலேயே நடந்தது . இங்கே வாழ்பவர்கள் தமிழர்கள் , இங்கே ஆக்கிரமிப்பு படை சிங்களவர்கள் . சிங்களவரின் நோக்கம் தமிழர்களின் இனத்தை , சொத்துகளை , கல்வியை , கட்டமைப்புகளை அழிப்பது . புலிகள் அவர்கள் மண்ணிலே நடத்திய போராட்டம் சிங்களவர்களுடைய நோக்கத்தை இலகுவாக அடைய வழி சமைத்தது . உலக நாடுகளின் உதவியையும் பெற அவர்களுக்கு முடிந்ததது .

தமிழருடைய கோரிக்கையான தமிழீழம் என்ற இலங்கையின் ஒரு பகுதி , சிங்களவரின் கோரிக்கையான முழு இலங்கையும் ஸ்ரீலங்கா என்ற கோரிக்கையுடன் சமமாக இருக்கவில்லை ஆதலால் , உலக நாடுகள் சிங்கள சிறிலங்காவை ஆதரித்து , சிங்களவர்களே எப்போதும் நாட்டை ஆளுவார்கள் என்ற நம்பிக்கையில் , ஒன்றுபட்ட ஸ்ரிலங்கவுக்குள் தீர்வு என்று முடிவு செய்து இருந்தன .

தமிழர்களும் முழு இலங்கையும் தமிழீழம் என்று சொல்லி அந்த போரை புலிகள் தமிழீழத்தில் நடத்தாமல் தமிழர் உரிமை கோரிய சிங்கள பிரதேசங்களில் நடத்தியிருந்தால் . இன்றைக்கு உலகநாடுகளே தமிழீழத்தை பிரித்து கொடுத்திருக்கும் . புலிகளும் பயங்கரவாதிகள் ஆகியிருக்க மாட்டார்கள். தமிழர்களே சிந்தியுங்கள் .


Mugunthan on 15 February, 2010 at 11:32 pm #

Hi Mr Sabeshan! You think you are a militry analysist but you are a “Thurooki”.


Vani on 17 February, 2010 at 7:03 pm #

It is very sad that our people stopped protests, etc. I don’t hear many lobbies and protests all over the world, apart from VKR referrendum. I hear the main reason is competition and money. When Tamils are going to learn lessons? I wait for your next article.


safetymuthu on 21 February, 2010 at 12:54 pm #

When start yutham 3 i wait and see mr.Prabaharan


Post a Comment
Name:
Email:
Website:
Comments: ஆங்கிலம் பாமினி அஞ்சல் தமிழ் 99